tamilnadu

img

ரூ.414 கோடி முறைகேடு அரிசி ஏற்றுமதி நிறுவனம் மீது சிபிஐயிடம் புகார்

புதுதில்லி, மே 9- ரூ.414 கோடி கடன்  முறைகேட்டில் தில்லியைச் சேர்ந்த பாஸ்மதி அரிசி ஏற்றுமதி ராம் தேவ் இன்டர்நேஷனல் லிமிடெட்  நிறுவனத்திற்கு எதிராக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா  சிபிஐயிடம் புகார் அளித்துள்ளது.  நிறுவன உரிமையாளர்களான சுரேஷ்குமார், நரேஷ் குமார் மற்றும் சங்கீதா ஆகியோர் மீது  சிபிஐ ஏப்ரல் 28 அன்று வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. அவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது.

நிறுவனத்தின் கடன்கள் 2016 இல் செயல்படாத சொத்து (என்.பி.ஏ) என வகைப்படுத்தப்பட்டன. நான்கு ஆண்டு தாமதத்திற்குப் பிறகு இந்த ஆண்டு பிப்ரவரியில் வங்கி நிறுவனம் மீது புகார் அளித்துள்ளது.ரூ.414 கோடி கடன் வாங்கியவர்களை காண வில்லை என்றும் வெளிநாடு தப்பி ஓடி விட்டதாகவும், 2016 முதல் காண வில்லை என்றும் புகாரில் தெரிவிக் கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஸ்டேட்பாங்க் ஆப் இந்தியாவிடம் ரூ .173 கோடி, கனரா வங்கியிடம் ரூ.76 கோடி, யூனியன் வங்கியிடம் ரூ.64 கோடி, மத்திய வங்கி யிடம் ரூ.51 கோடி, கார்ப்பரேசன் வங்கி யிடம் ரூ.36 கோடி, ஐடிபிஐ வங்கியிடம் ரூ.12 கோடி கடன் வாங்கி உள்ளது.